கோவிலுக்கு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன்.! மூன்று வயது சிறுமி பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரை அடுத்த சென்னபட்டியில் முரளி காலனி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சம்பத்குமார். இவர் மனைவி கோகிலா. இவர்களுக்கு மகாஸ்ரீ என்ற மூன்றுவயதில் ஒரு மகள் உள்ளார். 

இந்நிலையில் சம்பத்குமார் தனது உறவினர்களுடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல முடிவு செய்து, அதன்படி இன்று அதிகாலை சம்பத்குமார் தனது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் ஒரு வாடகை வேனில் கோவிலுக்கு புறப்பட்டனர். 

இதையடுத்து இந்த வேன் முரளி பிரிவு என்ற இடத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக இருந்த ஒரு மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் சம்பத்குமாரின் மகள் மகாஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வேனில் பயணம் செய்த சம்பத்குமார் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து போலீசருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். 

அந்த தகவலின் படி, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த சிறுமியின் உடலையும், விபத்தில் சிக்கி தவித்த பத்து பேரையும் மீட்டு அந்தியூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு அன்று விபத்தில் சிக்கி மூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near erode three years old girl died for van accident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->