ஈரோட்டில் பரபரப்பு.. கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து கொதித்த எண்ணையை ஊற்றிய காதலி கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் பூபதி மனைவி மீனா தேவி. 

இவரும் கார்த்திக்கும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போதே அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, மீனா தேவிக்கு பூபதியுடன் திருமணம் நடைபெற்று ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. 

இதற்கிடையே, கார்த்திக் அடிக்கடி பூபதியின் வீட்டிற்கு சென்று வந்த போது கார்த்திக்கும் மீனா தேவிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்த்திக்குக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மீனா கார்த்திகை வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்படி வீட்டிற்கு வந்த கார்த்திக்கிடம், மீனா என்னுடன் தொடர்பில் இருந்து கொண்டு நீ எப்படி வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டபோது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த மீனா தனது வீட்டில் கொதித்து கொண்டிருந்த எண்ணையை கார்த்திக் மீது ஊற்றியுள்ளார். இதில் கார்த்திக்கு தீக்காயம் ஏற்பட்டு வலியால் அலறித் துடித்துள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக கார்த்திக்கிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அவர் நடந்த அனைத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் குற்றம் சாட்டப்பட்ட மீனாவை தேடி வந்தனர். அந்த நேரத்தில் மீனா ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் இருப்பதாக தகவல் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீனாவை கைது செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், மீனா குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் போலீசார் மீனா தேவியை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்த சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near erode girl friend boil oil Poured on boy friend body


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->