சென்னையில் போதை சாக்லேட் விற்பனை செய்த வட மாநில இளைஞர் கைது.!
near chennai noth state youth arrested for drug choclate sale
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்காக போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஜாம் பஜாரில் உள்ள பீடா கடை ஒன்றில், போதை சாக்லெட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில், போதை சாக்லேட் விற்பனை செய்வதை கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர், கடையில் இருந்து ஏழு கிலோ போதை சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, விற்பனை செய்தவரையும் கைது செய்தனர். அதன் பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில், பீடா கடை நடத்தி வந்த அந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் யாதவ் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பீகார் மாநிலத்திலிருந்து போதை சாக்லேட்டுகளை வரவழைத்து, சென்னையில் விற்பனை செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
English Summary
near chennai noth state youth arrested for drug choclate sale