நாமக்கல்- பள்ளி முழுவதும் பரவிய மர்ம காய்ச்சல்; தொடர் விடுமுறை அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


திருச்செங்கோடு அருகே பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மாணவர்கள் அனைவருக்கும் மர்ம காய்ச்சல் பரவியதால் அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருச்சங்கோடு தாலுக்காவில் குப்பாண்டம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இடையாறு பாளையம் பகுதியில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில், பணிபுரியும் தலைமை ஆசிரியை சாந்திக்கு சமீபத்தில் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் 2 ஆசிரியைகள் மற்றும் 17 மாணவ, மாணவிகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் காய்ச்சல் பரவியதால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதே போல அங்கன்வாடியில் உள்ள 12 குழந்தைகளுக்கும் மர்ம காய்ச்சல் பரவியதால் பெற்றோர் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பயப்படுகின்றனர். இதனையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் அங்கு முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தான் இந்த காய்ச்சலுக்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Mysterious fever spread throughout the school Continued holiday announcement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->