நெருங்கும் பாராளுமன்ற தேர்தல்: தென்சென்னை தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்!
Naam Thamizhar katchi general meeting
சென்னை, வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தென் சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பேராசிரியர் தமிழ் செல்வி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மீதமான 39 தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருப்பதாவது, மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் சிலர் புரிந்து கொள்ளவில்லை.
முதற்கட்ட தலைவர்கள் இல்லாத போது இரண்டாம் கட்ட தலைவர்கள் என்பதா தலைவருக்கு என்ன தகுதி உண்டு. கட்சியை தொடங்குவது எளிது ஆனால் அதனை தொடர்வது என்பது கடினமானது என தெரிவித்துள்ளார்.
English Summary
Naam Thamizhar katchi general meeting