மர்ம முறையில் மரத்தில் பிணமாக தொங்கிய இளம்பெண்..! தீவிர விசாரணையில் போலிசார்...! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் இளம்பெண் மர்மமான முறையில் மரத்தில் பிணமாக தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (38). இவருக்கும், புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தியா(24) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து வரதட்சனை கேட்டு சோமசுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தியாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை சந்தியா இடையமேலூர் பகுதியில், சாலையோர புதரில் உள்ள மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து சந்தியாவின் தாயார், தனது மகளை வரதட்சனை கொடுமைப்படுத்தி சோமசுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தியா உயிரிழந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysteriously the young woman hung dead on the tree in Sivagangai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->