திருப்பூரில் பரபரப்பு - தனியார் நிறுவன செய்தியாளருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நேசபிரபு. தனியார் நிறுவனம் ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வரும் இவரை நேற்று சிலர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். 

இதைப்பார்த்து சந்தேகமடைந்த செய்தியாளர் பிரபு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்குள் அந்த கும்பல் மேலாளர் அறையில் இருந்த அவரை சுற்றி வளைத்தது.

பின்னர் அறையின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று, பிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்துச் சென்றுள்ளது. இதனால், பிரபு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.

பிரபு அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious boys attack private company reporter in tirupur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->