கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் நேர்ந்த கொடூரம் - அதிர்ச்சியில் பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் இரண்டு பேரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றோரு நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தாக்கப்பட்ட இருவரும் மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சோனை என்பதும் தெரியவந்தது. நண்பர்களான இருவரும் மதுரை மதிச்சியம் பகுதியில் ஆடை தேய்த்துக் கொடுக்கும் கடை நடத்தி வருவதும், குடும்ப பிரச்னை, முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. 

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் இடத்திற்கு அருகில் இந்த கோளை சம்பவம் நடைபெற்றதால் கள்ளழகரை காண வந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in madurai chithirai festival


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->