கொலை முயற்சி வழக்கு! போலீசாருக்கு தண்ணிகாட்டிய குற்றவாளிகளை தட்டி தூக்கிய காவல்துறை! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம், கரசங்கால் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 47) இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரை கடந்த மாதம் அதே பகுதியில் உள்ள மருந்து கடை அருகே கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். 

அதேபோல் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 26) என்பவரையும் கொலை செய்ய முயன்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ய முயற்சித்தவர்கள் கரசங்கால் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (வயது 35) மற்றும் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 29) என்பது தெரிய வந்தது. 

அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதிக்குச் சென்று இருவரையும் வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் கோபிநாத் மீது பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளது என தெரிய வந்தது. 

அதுபோல விக்னேஷ் மீதும் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder case 2 people arrest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->