சொத்து பிரச்சனை தாய் மகன் படுகொலை.. காவல்துறையினர் விசாரணை.. திருவாரூர் அருகே பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


சொத்து தகராறில் தாய் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் சிறுகளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு திருமணமாகி அலங்கார மேரி என்ற மனைவியும் அஜய் என்ற மகனும் உள்ளனர். பாஸ்கருக்கும் அவரது அண்ணன் மகன்களான அன்பழகன் மற்றும் செபஸ்டின் ஆகியோருக்கும் இடையே பூர்வீக இடம் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கடப்பாரையால் அன்பழகன் மற்றும் செபஸ்டின் பாஸ்கரின் மனைவி அலங்கார மேரி மற்றும் அஜய்யை தாக்கினர்.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother and Son Killed In Thiruvarur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->