புதுக்கோட்டை : சிறுமி 6 மாத கர்ப்பம்.! மெக்கானிக் சிறையில் அடைப்பு - Seithipunal
Seithipunal


சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக்கை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் மெக்கானிக் மனோஜ்குமார்(22). இவர் 17 வயதுடைய சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இந்த காதல் விவகாரத்தையறிந்த சிறுமியின் பெற்றோர் மனோஜ் குமாரை கண்டித்துள்ளனர். ஆனால் மனோஜ் குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமானார்.

தற்பொழுது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் இதுகுறித்து பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இதையறிந்த மனோஜ் குமார் தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து மனோஜ் குமாரை தீவிரமாக தேடி வந்த நிலையில், தனிப்படை போலீசார் கோவையில் பதுங்கி இருந்த மனோஜ்குமாரை கைது செய்தனர். பின்பு போலீசார் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் மனோஜ் குமாரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mechanic arrested for 6 month pregnant in a 17 year old girl in Pudukkottai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->