35 ஆயிரம் வேலையை உதறிவிட்டு துப்புரவு பணியில் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர்.! - Seithipunal
Seithipunal


கோவை மாநகராட்சியில் மொத்தமாக நூறு வார்டுகள் உள்ளது. இதில் 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலியாக இருந்த 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப கோவை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்த துப்புரவு வேலைக்காக பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் என மொத்தமாக 7,300 பேர் விண்ணப்பித்தனர். விண்னப்பித்த அனைவரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அதில் 5,200 பேர் பங்கேற்றனர். இட ஒதுக்கீட்டை அடிப்படையாக கொண்டு விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது.

இந்நிலையில்,  காலியாக இருந்த 549 கலிப்பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்ட 321 பேருக்கு துப்புரவு தொழிலாளர் பணிநியமன உத்தரவு அண்மையில் வழங்கப்பட்டது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். 

இதில், கோவையில் எம்.பி.ஏ படித்து விட்டு சர்வதேச நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகரிக்க பணியாற்றிய சையத் முக்தார் அகமது  பட்டதாரி ஒருவர் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியில் சேர்ந்துள்ளார். கோவையை சேர்ந்த ஹைதாராபாத்தில் நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார். தற்போது அந்த பணியை உதறித் தள்ளிவிட்டு கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் துப்புரவு பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

அரசு பணியில் பணி நிரந்தரம் இருப்பதால், 35 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தை உதறித் தள்ளவிட்டு, தற்போது 16,000 ரூபாய் சம்பளம் துப்புரவு பணியில் சேர்ந்துள்ளார். எந்த பணியும் இழிவானது இல்லை எனவும் துப்புரவு பணி மருத்துவர்களின் பணிக்கும் மேலானது எனவும் அதில் தான் மன நிறைவுடன் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்

அதேபோல, கோவை தெலுங்குபாளையத்தை பகுதியை சேர்ந்த மோனிகா(23) என்ற எம்.எஸ்சி. பட்டைய படிப்பை படித்து வரும் மாணவிக்கும் துப்புரவு பணியாளர் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mba degree holder join municipality cleaning job


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->