திரைப்பட வசனம் போல் இல்லை... நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா பதில்! - Seithipunal
Seithipunal


மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது. அண்ணா நகரில் இந்த கதி என்றால் மற்ற இடங்களை யோசித்துப் பாருங்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு இது மிகவும் மோசமாக உள்ளது. 

மழைநீர் சேமிப்பு வடிகால் தொடர்பான திட்டம் என்ன ஆனது என தெரியவில்லை. ஒரு வாக்காளர் என்ற முறையில் இதை கேட்டுக்கொள்கிறேன். சென்னை தொகுதி எம்.எல்.ஏக்கள் பிரச்சனைகளை சரி செய்து கொடுங்கள். 

எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்து விடாதீர்கள் என காட்டமாக பேசி இருந்தார். இதனை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, கடந்த 2015 ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான போல் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். திரைப்பட வசனம் போல் பேசிவிட்டு கைதட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை. 

வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் செய்து கொடுக்கின்றனர். 

அரசியல் செய்ய முயற்சிக்காமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும் அரசு அதனை நிறைவேற்றும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayor priya replies Vishal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->