மயிலாடுதுறை: தாறுமாறாக ஓடிய காரால் கர்ப்பிணி பெண், கணவர், மூதாட்டி என 3 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


கற்கோவில் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி கர்ப்பிணி பெண், பெண்ணின் கணவர், மூதாட்டி ஆகியோர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வன்னிய குடி கிராமத்தை சார்ந்தவர் புருசோத்தமன். இவரது மனைவி தமிழ்வாணி. தமிழ்வாணி தற்போது கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், கர்ப்பிணி மனைவியுடன் புருசோத்தமன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இதன்போது, சாலையில் அதிவேகத்தில் வந்த கார் இவர்களின் வாகனம் மீது தூக்கி வீசப்பட்ட நிலையில், தமிழ்வாணி மற்றும் புருசோத்தமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த 2 மூதாட்டியின் மீது மோதிய வாகனத்தால், தையல் நாயகி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

காயமடைந்த மற்றொரு மூதாட்டி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விஷயத்தால் கொதித்துப்போன உள்ளூர் மக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கி, கார் ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும், அதிவேகமாக சாலையில் பயணம் செய்ததால் கர்ப்பிணி பெண், பெண்ணின் கணவர், சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Karkoil Car Accident Pregnant Woman His Husband and 3 died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->