அரியலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாகவந்த தகவலையடுத்து தா.பழூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது கோடாலி கருப்பூர் பகுதியில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் சோதனை செய்தபோது ஜெயராமன் மகன் துளசிராமன் என்பவரின் வீட்டின் பின்புறம் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார் துளசிராமன் கைது செய்து அவரிடம் இருந்த 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for selling liquor illegally in Ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->