கடலூா்|| திட்டக்குடி அருகே மகளைத் தாக்கிய மருமகன் - ஆத்திரத்தில் மாமனார் செய்த அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கடலூா் || திட்டக்குடி அருகே மகளைத் தாக்கிய மருமகன் - ஆத்திரத்தில் மாமனார் செய்த அதிர்ச்சி சம்பவம்.!

கடலூா் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரகுபதி-சத்யா தம்பதியினர். இவர்களுக்கு சமித், தஷ்வந்த் என்று 2 மகன்கள் உள்ளனர். என்ஜினீயரான ரகுபதி வெளிநாட்டில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் சொந்த ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வந்தார். 

இதற்கிடையே மது பழக்கத்திற்கு ஆளான ரகுபதி தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி சத்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக சத்யா தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், ரகுபதி நேற்று முன்தினம் இரவும், மதுகுடித்து விட்டு வந்து சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதுபற்றி அறிந்த சத்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து தகராறு குறித்து ரகுபதியைத் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ரகுபதி, அருகில் இருந்த செங்கல்லால் மாமனாரைத் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதைபார்த்த ரகுபதியின் மாமனார், அருகில் இருந்த கட்டையால் ரகுபதியை சரமாரியாக தாக்கினார். 

இதில், ரகுபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை பற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர் உயிரிழந்த ரகுபதி மற்றும் காயமடைந்த சுசீலாவை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து செல்வராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill son in law in cuddalore thittakudi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->