பட்டப்பகலில் காவலர் மீது கொலை வெறித் தாக்குதல்! - Seithipunal
Seithipunal


சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் அவசர தேவையாக தனது நெருங்கிய நண்பர் அசோக் என்பவருக்கு 1,500 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆனால், இந்த பணத்தை திருப்பி தராமல் அசோக் இழுத்தடித்து வந்த நிலையில், சிரஞ்சீவி இன்று கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். 

அப்போது, இருவருக்கும் இடையே, வாய்த் தகராறு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கவால் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதன் படி ராமாபுரம் காவல் நிலைய காவலர் பிரகாஷ் சீருடை அணியாமல் சம்பவ இடத்திற்கு வந்து, சண்டையிட்டுக் கொண்டிருந்த சிரஞ்சீவி மற்றும் அசோக்கை தடுக்க முயன்றார்.

இதனால், ஆத்திரமடைந்த சிரஞ்சீவி காவலர் பிரகாஷை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், காவலர் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவலர் பிரகாஷை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். 

உடனே இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிரஞ்சீவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னையில் பட்டப்பகலில் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for attck police in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->