தஞ்சாவூர் : பெண்களை செருப்பால் அடித்த சம்பவம் - திமுக நிர்வாகியின் கணவர் அதிரடி கைது.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் : பெண்களை செருப்பால் அடித்த சம்பவம் - திமுக நிர்வாகியின் கணவர் அதிரடி கைது.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அருகே குறிச்சி ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபாலட்சுமி. இவர் பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக மகளிர் அணியின் அமைப்பாளராக உள்ளார். இவருடைய கணவர் சாமிநாதன் .

இந்த நிலையில், குறிச்சி மாரியம்மன் கோயில் பகுதியில் பழங்குடியின பெண்கள் சிலர் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட  குப்பையை சாமிநாதனுக்கு சொந்தமான இடத்தில் சேகரித்துள்ளனர். 

இதைப் பார்த்த சாமிநாதன் பழங்குடியினைப் பெண்கள் பொருட்களை திருடி செல்வதாக கூறி அவர்களைத் தரக்குறைவாக பேசி அவர்களின் பையில் வைத்திருந்த பொருட்களை கீழே கொட்டும்படி சொல்லி செருப்பால் அடித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின் பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சரிச்சை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for attack woman with shoe issue in thanjavur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->