#Breaking || முரசொலி பஞ்சமி நில வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ள நிலம் தொடர்பான வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாகவும், அதனை மீட்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்ததன் அடிப்படையில் அப்போது தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் முரசொலி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை காவலர் ஆர்.எஸ் பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்று வந்தபோது தேசிய பட்டியல் இனத்தோர் ஆணையம் உரிமை தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றாலும் இந்த நிலம் ஏற்கனவே பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க அதிகாரம் உள்ளது என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கும் நிறைவுபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்க பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை தொடரலாம் எனவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு விளக்கங்களை பெற்று உரிய முடிவை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC verdict Murasoli Panchami land case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->