#சேலம் : 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த உடற்கல்வி ஆசிரியர்... ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்...!
Life imprisonment for physical education teacher who married 10th class girl in salem
சேலம் மாவட்டத்தில் ஆசை வார்த்தைகள் கூறி பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த உடற்கல்வி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த மஞ்சினி பகுதியை சேர்ந்தவர் காங்கமுத்து(37). இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் காங்கமுத்து பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 2020ஆம் ஆண்டு மாணவியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து மாணவியரின் பெற்றோர் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் காங்கமுத்துவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, பத்தாம் வகுப்பு மாணவியை குழந்தை திருமணம் செய்த ஆசிரியர் காங்கமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 12000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
English Summary
Life imprisonment for physical education teacher who married 10th class girl in salem