"நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்டினு நிரூபிச்சிட்டலே.!" வளைத்து, நெளித்து ரோடு போட்ட இஞ்சினியரை வறுத்தெடுக்கும் மக்கள்.!
Kovai mettuppalayam New Road Photos makes shock To peoples
கோவை பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் புதிதாக சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சாலை போடுகின்ற பணி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இரவு நேரங்களில் துவங்கி அதிகாலை வரை நடைபெறுகிறது.
தற்போ கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி பகுதிக்கு சாலை போடுகின்ற பணி நடைபெற்ற வருகிறது. அப்பொழுது அந்த சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதான மின் மயான வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை அப்புறப்படுத்தாமல் ஊழியர்கள் சாலை அமைத்துள்ளனர்.
இதனால் வாகனங்கள் நிற்கும் பகுதிகளை விடுத்து வளைத்து, நெளித்து சாலையை போட்டு இருக்கின்றனர். சாலை பணிகளை மேற்கொள்வதற்கு முன் அங்கிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு புதிய சாலை போடுவது தான் வழக்கம்.
அதை விட்டுவிட்டு ஆக்கிரமிப்புகளை அப்படியே வைத்துவிட்டு சோம்பேறித்தனத்துடன் செயல்பட்டுள்ள நெடுஞ்சாலை துறையின் இந்த செயல் தற்போது மக்களிடம் கண்டனங்களை பெற்று வருகிறது.
English Summary
Kovai mettuppalayam New Road Photos makes shock To peoples