என்ன எல்லாம் பளபளன்னு இருக்கீங்க? - சர்ச்சையை கிளப்பிய கதிர் ஆனந்த்.!
kathir anand speech controvercy in vellore
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் காட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் நேற்று தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்;
அப்போது அவர் பேசியதாவது:- "மேடையில் இருந்து பார்த்தால் சுற்றியுள்ள பெண்களின் முகம் எல்லாம் பளபளவென்று தெரிகிறது. என்னவென்று தெரியவில்லை எல்லோரும் பாண்ட்ஸ் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்க..? என்ன காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் செலுத்தியது வந்துவிட்டதா? என்று பேசியுள்ளார்.
முதல்வர் செலுத்திய மகளிர் உரிமைத் தொகையில் தான் பெண்கள் பவுடர் போட்டுக்கொண்டு பளபளவென்று இருப்பது போல திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசிய வீடியோ வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மகளிர் எல்லாம் ஓசி பேருந்தில் தான் போகிறீர்கள் எndru பேசியது சர்ச்சையான நிலையில்,. தற்போது எம்பி கதிர் ஆனந்த் பேசியது திமுகவிற்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
kathir anand speech controvercy in vellore