மிரட்டும் மிக்ஜம் புயல் - காசிமேடு, திருவொற்றியூர் பகுதியில் கடல் சீற்றம்.!
kasimedu and ennur Sea Furious for storm
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து ஐந்தாம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த புயல் எதிரொலியாக சென்னையில் உள்ள காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
English Summary
kasimedu and ennur Sea Furious for storm