கஞ்சா போதையில் கத்தியை காட்டி போலீஸை மிரட்டிய இளைஞர்கள்.!
Kanja drug boys problem with police in Thiruthani
திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கூட்ரோடு அருகில் இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் எதிரே வந்த, மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு சென்றுள்ளனர். இது போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அந்த 3 இளைஞர்களும் திருத்தணி மேட்டுத்தெரு அருகே கஞ்சா போதையில் கையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டியுள்ளனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று கஞ்சா போதை இளைஞர்களையும் தடுக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அந்த போதை இளைஞர்கள் போலீசாரையும் பணி செய்ய விடாமல் அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கஞ்சா போதை இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Kanja drug boys problem with police in Thiruthani