காஞ்சிபுரம் : குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்து.. மேலும், 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில், கடந்த மார்ச் 22ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 27 பாதிக்கப்பட்ட நிலையில் 9 தொழிலாளர்கள் பலியானார்கள்.

மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்த 18 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படடு வந்தது.

இதனையடுத்து இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணமும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 அதிகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram crackers factory fire again 2 peoples death totaly 11 peoples death


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->