சேலம் : விபத்தில் குடும்பத்தினரை இழந்து தவித்த பள்ளி மாணவிக்கு கமல்ஹாசன் நிதியுதவி.! - Seithipunal
Seithipunal


சேலம் : விபத்தில் குடும்பத்தினரை இழந்து தவித்த பள்ளி மாணவிக்கு கமல்ஹாசன் நிதியுதவி.!

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்பாறைப்பட்டி அடுத்த செவ்வாய்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் அமுதா என்ற மாணவி. பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ள இவரது அம்மா, அப்பா மற்றும் அக்கா என்று குடும்பத்தினர் அனைவரும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டனர். 

இதனால், அந்த மாணவி ஆதரிப்பார் யாருமின்றி,  தன் படிப்பிற்கு உதவுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதுகுறித்த தகவலை அறிந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், மாணவி அமுதாவிற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். 

அதற்கான காசோலையை கமல்ஹாசன் நேற்று மாணவியிடம் நேரில் வழங்கினார். மேலும், நன்றாக படிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தனக்கு ஊக்கம் அளித்ததாக மாணவி அமுதா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

இதற்கு முன்னதாக கோயம்புத்தூரில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணி புரிந்து வந்த ஷர்மிளா என்ற இளம்பெண் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கார் வழங்கப்பட்டு, அதற்கான சாவியை கமல்ஹாசன் ஷர்மிளாவிடம் கடந்த மாதம் நேரில் ஒப்படைத்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamalhasan financial support to student amutha


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->