நள்ளிரவில் பரபரப்பு.. டாக்டர் வீட்டை சுத்துப் போட்ட அதிகாரிகள்.. . மதுரையில் ஐடி ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று பண பட்டுவாடா தொடர்பான புகார்களில் வருமான வரித்துணையினர் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் மதுரையில் தனியார் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் வீட்டில் நள்ளிரவில் சென்ற வருமானவரித்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். 

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் தனியார் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் மோகன் என்பவரது வீட்டில் நேற்று நள்ளிரவு திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். சாலை வரை நடைபெற்ற இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தேர்தல் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதா அல்லது வரியைப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITRaid in madurai private doctor home in midnight


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->