காவல்துறை அதிகாரியிடம் அடாவடி தகராறு..! வழக்கறிஞருக்கு இறுதியில் அரங்கேறிய பெரும் சோகம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி - சங்கரன்கோவில் சாலையில் எஸ்.வி.சி. பொறியியல் கல்லூரியானது உள்ளது. இந்த கல்லூரிக்கு அருகில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். 

இந்த சமயத்தில்., வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் அணியாமல் வரும் பட்சத்தில்., அவர்களை குறிவைத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில்., இருசக்கர வாகனத்தில் வருகை தந்த நபரொருவர் மதுரை நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் அரசு வழக்கறிஞர் என்று கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதுமட்டுமல்லாது இவர் தலைக்கவசம் அணியாமல் வந்ததற்கு காவல் துறையினர் நிறுத்தியதால்., காவல் துறையினரிடம் ஆவேசமாக பேசி., சாலையில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல்., காவல் அதிகாரியை எரித்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

இது தொடர்பான வீடியோ காட்சியானது வெளியாகி வைரலானதை அடுத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., அங்குள்ள வீரிருப்பு கிராமத்தை சார்ந்த வேலுசாமி என்பதும்., இவர் வழக்கறிஞர் என்பதும்., அரசு வழக்கறிஞராக பணியாற்றவில்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வேலுசாமியின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In puliyangudi police arrest lawyer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->