தூக்க கலக்கத்தில் எரிவாயு சிலிண்டர் லாரியை இயக்கி கோர விபத்திற்கு வித்திட்ட சோகம்.. அதிஷ்டத்தால் உயிர் தப்பிய அப்பாவி பொதுமக்கள்.!!
in erode lorry accident in electric transformer
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சிப்காட் பகுதியில் இருந்து சுமார் 339 சிலிண்டரை ஏற்றுக்கொண்ட லாரியானது புறப்பட்டு சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில், அங்குள்ள ஆசிரியர் காலனி பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்குள்ள ட்ரான்ஸ்பார்மரில் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் ட்ரான்ஸ்பார்மருக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆட்டோவும் சேதமடைந்த நிலையில், விபத்து ஏற்பட்டவுடன் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனையடுத்து இது தொடர்பான தகவல் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் கியாஸ் கசிவு இல்லாததை உறுதி செய்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்திற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in erode lorry accident in electric transformer