தர்மபுரி அருகே சோகம்: விபத்தில் உயிரிழந்த கணவர்.! துயரத்தில் மனைவியும் பலி.!
Husband died in an accident wife also died in tragedy in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் விபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், துயரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் மஞ்சநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் அரசு பேருந்து கண்டக்டர் பாலகிருஷ்ணன்(54). இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மாலை பாலகிருஷ்ணன் மகள் சிவரஞ்சினியுடன் (13) ஆதனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஆதனூர் அருகே சென்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தந்தை பலத்த காயமடைந்த நிலையில் மகள் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். மேலும் சிவரஞ்சனி பலத்த காயமடைந்த நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன் உடல் பெயது பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட மனைவி காஞ்சனாவிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் காஞ்சனாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் காஞ்சனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband died in an accident wife also died in tragedy in dharmapuri