தூத்துக்குடி || பட்டப்பகலில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்.! ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குணா-அமராவதி தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில், அமராவதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீட்டிற்குச் செல்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள கோரம்பள்ளம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு திடீரென வந்த அவரது கணவர் குணாவும், அவரது நண்பர்களும் சேர்ந்து அமராவதியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில், ஆத்திரமடைந்த குணா, அவரது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இதனால், அமராவதி ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து, குணா உட்பட மூவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர். 

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம், அமராவதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தப்பியோடிய குணா உட்பட மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband attack wife near thoothukudi collector office


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->