திராவிட மாடல் ஆட்சியில்... பெரியார் சிலையை முக்காடு போட்டு தூக்கிய அரசு அதிகாரிகள்..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி இளங்கோவன் என்பவர் பெரியாரின் மார்பளவு சிலையை புதிதாக கட்டிய தனது வீட்டின் முன்பு அமைத்துள்ளார். இளங்கோவன் தனது சொந்த பட்டா இடத்தில் பெரியார் சிலை அமைத்துள்ளதாக வருவாய்த்துறை  மற்றும் காவல் துறையினருக்கு புகார் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து இளங்கோவின் வீட்டிற்குச் சென்ற வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பெரியார் சிலையை அகற்ற போவதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளங்கோவன் "பட்டா இடத்தில் பெரியாரின் சிலை அமைக்கலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் இரண்டு ஆணைகளை சமர்ப்பித்தோம் பெரியார் சிலையை உடைத்து எடுப்போம் என இந்த ஆட்சிக்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாடு முழுவதும் பரவி தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள். திராவிட மாடர்ன் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு எதிராக இவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என பேசிய வீடியோ வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் பெரியார் சிலைக்கு துணியால் முக்காடு போட்டு உடைத்து எடுத்துச் சென்றனர். 

மேலும் சிலை உடைத்து எடுத்து செல்லப்பட்ட இடத்தில் இளங்கோவன் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் இந்த இடத்தில் இருந்த தந்தை பெரியார் சிலையை சட்டவிரோதமாக வருவாய் மற்றும் காவல்துறை அகற்றியது என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தமிழக அரசு அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளங்கோவனின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் வீடு அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திராவிடமாடல் ஆட்சியில் தந்தை பெரியாரின் சிலை முக்காடு போட்டு தூக்குவதா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt officials removed periyar statue in sivagangai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->