மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர் - போலீசார் விசாரணை.!!
govt employee sucide attempt in tirunelveli
மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர் - காரணம் என்ன?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகாராஜநகர் வேடவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செந்தூர் முருகன். இவர் திருநெல்வேலியில் உள்ள சி.பி.சி.ஐ.டியின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆய்வாளராக உள்ளார். இந்தநிலையில் செந்தூர் முருகன் இன்று காலை பொழுது விடிந்தும் நீண்ட நேரமாக அறையிலிருந்து வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அவரது அறையை தட்டியுள்ளனர். இருப்பினும் செந்தூர் முருகன் வெளியே வராததால் உறவினர்கள் அறையின் கதவை உடைத்துஉல்லேச் சென்று பார்த்துள்ளனர். அப்போது செந்தூர் முருகன் விஷம் குடித்த நிலையில் மயங்கியவாறு கிடந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே செந்தூர் முருகனுக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பு குற்றப்புலனாய்வுப் பிரிவில் நெல்லை சரகத்தில் பணி புரிந்து வந்த அவர் மதுரை சரகத்திற்கு மாறுதல் செய்து உத்தரவு வந்தது. அதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அவர் மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
govt employee sucide attempt in tirunelveli