சாலை விபத்தில் உயிரிழந்த காதலன்.. மனவேதனையில் காதலியும் தற்கொலை..!! - Seithipunal
Seithipunal


ஆவடி கோவில்பதாகை பூம்பொழில் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் வினோதினியும்,  ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை கரிமேடு பகுதியில் வசித்து வரும் வசந்த் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி கும்மிடிப்பூண்டி அருகே நடந்த சாலை விபத்தில் வசந்த் உயிரிழந்தார். இதன் காரணமாக வினோதினி மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் வசந்த்தின் பிரிவை தாங்க முடியாமல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் உயிரிழப்பை தாங்க முடியாமல் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girlfriend committed suicide her boyfriend died in road accident


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->