தோழியின் காதலுக்கு உதவிய மாணவி..! இறுதியில் அரங்கேறிய கொடுமை.!  - Seithipunal
Seithipunal


அன்பு என்ற மாணவி கள்ளக்குறிச்சி அருகே இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அன்புவின் தோழி ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தீனா என்ற இளைஞருக்கும், இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் இருவரின் பெற்றோருக்கும் தெரிய அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

எனவே இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அன்பின் உதவியை நாடியுள்ளனர். உதவி செய்வதாக நினைத்து கொண்ட அன்பு, தீனாவிற்கும், தன்னுடைய தோழிக்கும் ஒரு கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

Image result for dead seithipunal

அன்பு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். பள்ளி சென்ற தன்னுடைய மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காணாமல்போன மாணவியை தேடி பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்பொழுது அன்பு என்ற தோழியுடன் பள்ளி நடக்கும் பொழுது நடுவில் அவர்கள் வெளியில் சென்று விட்டனர் என்று கூறியுள்ளனர்.

எனவே, அன்புவின் வீட்டிற்கு வந்து விசாரித்த பெற்றோர் தனது மகள் எங்கே என்று உண்மையை கூறாவிட்டால் போலீசில் புகார் செய்வதாக கூறி மிரட்டி உள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அன்பு வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl help for friend love and suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->