கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உடல் சென்னை வந்தடைந்தது..! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கேதார்நாத், மிகவும் புகழ்பெற்ற புனித தலம் ஆகும். கேதார்நாத்-குப்தகாசிக்கு இடையே ஆர்யன் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம் ஒன்று ஹெலிகாப்டர் சேவையை இயக்கி வருகிறது. 

இதையடுத்து, வசதியான பக்தர்கள், அந்த ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தி அங்குள்ள கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். இதைத்தொடர்ந்து, கடந்த 18-ந் தேதி காலை கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு 6 பக்தர்கள், குப்தகாசிக்கு அந்த ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். 

அப்போது செல்லும் வழியில், ருத்ரபிரயாக் மாவட்டம் கருட் சாட்டி மலைப்பகுதியின் அருகே வந்தபோது, அந்த ஹெலிகாப்டர் திடீரென வெடித்துச் சிதறியது. அன்று காலை 11.45 மணிக்கு  நடந்த, இந்த கோர விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த 6 பக்தர்களும், விமானியும் பலியானார்கள். 

மோசமான வானிலை இருந்ததன் காரணமாக, எதிர்புறத்தில் எதுவுமே தெரியாததால் இந்த விபத்து நடந்ததாக தகவல் தெரிகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த 3 பேரின் உடல்கள் இன்று சென்னை வந்தடைந்தது.  அவர்களது உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்பு உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

getharnath helicoptar accident chennai people body come to chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->