தோழிக்கு பாலியல் தொந்தரவு.! தொழிற்சாலை மேலாளருக்கு கத்தி குத்து..! நண்பர்கள் கைது..! - Seithipunal
Seithipunal


தோழிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிற்சாலை மேலாளரை கத்தியால் குத்திய நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்குச் சென்ற கோகுல்ராஜ், தொழிற்சாலையின் உள்ளே நுழையும்போது திடீரென மர்ம நபர்கள் கோகுல்ராஜை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.

இதையடுத்து பலத்த காயமடைந்த கோகுல்ராஜ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மனோஜ், அசோக் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மனோஜின் தோழிக்கு, கோகுல்ராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் கோகுல்ராஜை கொலை செய்ய திட்டமிட்டு கத்தியால் குத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மனோஜ் மற்றும் அசோக் ஆகிய இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Friends who stabbed the factory manager who sexually harassed his girl friend in kanchipuram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->