விழுப்புரம் : பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றுள்ளது. இந்த பள்ளியில், பன்னிரெண்டாம்  வகுப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் நேற்று மாலை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்குச் சென்றுள்ளனர். 

அதன் பின்னர், அவர்கள் இருவரும் அருகிலுள்ள வயல்வெளி பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர், தனிமையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவியை பார்த்தனர்.

இதையடுத்து மாணவர்களின் அருகில் சென்ற அந்த கும்பல், மாணவரை கண்மூடித் தனமாகத் தாக்கியதுடன், அவர்களில் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

அதன் பின்னர் அந்த கும்பல், மாணவி அணிந்திருந்த தங்க செயின் மற்றும் அவர்களிடம் இருந்து பணம் போன்றவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். 

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவம் குறித்து இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, போலீசார் மாணவியிடம் இருந்து தகவல்களை பெற்றனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் படி, விழுப்புரம் போலீசார் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four special force appointed for vilupuram school girl rape case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->