நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


இன்று அதிகாலை, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தும், சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி அவர்கள் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க  மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died for government bus accident in banglore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->