முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளருமான சி.விஜயபாஸ்கர் விராலிமலை அருகே உள்ள இலுப்பூரில் வசித்து வருகிறார். 

அவருக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்து வந்ததையடுத்து அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, அவர் திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வந்தது.

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அரசியல் கட்சியினர், அரசு இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

formar minister vijaya baskar admitted hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->