மதுரையில் வழி மறைத்து 50 லட்சம் பணம் கொள்ளை.! ஆயுதப்படை காவலர் உள்பட 5 பேர் கைது.!
five peoples arrested for fifty lakhs amount robbery in madurai
மதுரையில் வழி மறைத்து 50 லட்சம் பணம் கொள்ளை.! ஆய்தப்படை காவலர் உள்பட 5 பேர் கைது.!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேக் தாவூத். இவர் தனது மனைவி யூசூப் சுலேகாவுடன் திருச்சிக்கு காரில் சென்றுள்ளார். இந்தக் காரை மதுரையை சேர்ந்த அபுபக்கர் என்ற ஓட்டுநர் ஓட்டியுள்ளார்.
இதையடுத்து இவர்களது கார் கொட்டாம்பட்டி- திருச்சுனை பகுதி அருகே சென்ற போது போலீஸ் உடையில் இருந்த இருவர் வழிமறித்து காரை சோதனை செய்துள்ளனர்.
சோதனையின் போது சேக் தாவூத் வைத்திருந்த ஐம்பது லட்ச ரூபாய் பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு, பின்னர் அந்த பணத்தை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
அதன் படி சேக் தாவூத் கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணத்தை எடுத்து சென்ற போலீஸார் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் சேக் தாவூத் அங்கிருந்த போலீஸாரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கு நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பணத்தை எடுத்துச் சென்றவர்களைத் தேடி வந்த நிலையில் போலீசார் சேக் தாவூத்தின் காரை ஓட்டி வந்த அபுபக்கர் சித்திக்கை விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில், ஐம்பது லட்சம் பணத்தை அபுபக்கரின் அண்ணன் சதாம் உசேன், பார்த்தசாரதி, கறிக்கடை நடத்தி வரும் அசன் முகம்மது, ஆயுதப்படை காவலரான நாகராஜ கோகுல பாண்டியன் உள்ளிட்டோர் திட்டமிட்டு கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 49 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
English Summary
five peoples arrested for fifty lakhs amount robbery in madurai