திண்டுக்கல் : போலி ஆவணம் தயாரித்து மேஜிக் ஷோ நடத்திய வடமாநிலத்தவர்கள் 5 பேர் கைது.!
five north state peoples arrested in dindukal for create fake document
திண்டுக்கல் : போலி ஆவணம் தயாரித்து மேஜிக் ஷோ நடத்திய வடமாநிலத்தவர்கள் 5 பேர் கைது.!
திண்டுக்கல் மாவடட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் டெல்லியைச் சேர்ந்த ரோகித் ராய், கமல்ராய், மெகந்தர்ராய், அஜய்ராய், மேக்ராஜ் உள்ளிட்ட ஐந்து பேரும் திண்டுக்கல் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேஜிக் ஷோ நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீனின் சுற்றறிக்கை ஒன்று அலுவலகத் தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்தது.
இதைப்பார்த்த டெல்லியைச் சேர்ந்த குழுவினர் அந்த சுற்றறிக்கையில் இருந்த முதன்மைக் கல்வி அலுவரின் கையெழுத்தைப் புகைப்படம் எடுத்துகொண்டு, மேஜிக் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக போலி சுற்றறிக்கையை தயார் செய்தனர்.
இந்த போலி சுற்றறிக்கையைக் காண்பித்து டெல்லியைச் சேர்ந்த குழுவினர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளிலும் மேஜிக் ஷோ நடத்தி வந்தனர். இதற்கிடையே சில பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் மேஜிக் ஷோ நடத்தியதாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கு ரிப்போர்ட் அனுப்பினர். அப்போது தான் முதன்மை கல்வி அலுவலருக்கு இது தொடர்பாக நடந்த முறைகேடு தெரியவந்தது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன் கொடுத்த புகாரின் படி, போலீசார் வட மாநிலத்தவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
five north state peoples arrested in dindukal for create fake document