மதுரை சரவணா ஸ்டோரில் தீ விபத்து.. ஓட்டம் பிடித்த பொதுமக்கள்..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே கடந்த டிசம்பர் மாதம் 10 மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான சரவணா ஸ்டோர் வணிக வளாகம் திறக்கப்பட்டது. 

இந்த நிலையில் சரவணா ஸ்டோர் கட்டிடம் முழுமையான கட்டுமான பணிகள் முடிவராத நிலையில் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று சரவணா ஸ்டோரில் 10வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சரவணா ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாங்கும் உணவுப் பொருட்களை உண்பதற்காக 10வது மாடியில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே மாடியில் சமையலறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மதுரை சரவணா ஸ்டோரின் 10வது மாடியில் அமைந்துள்ள சமையலறை பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் கடையில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மதுரை சரவணா ஸ்டோரின் கட்டிட வேலைகள் முழுமையாக நிறைவு பெறாமல் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்பொழுது தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire incident at Madurai Saravana store


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->