புதுச்சேரி || மகன் இறந்த துக்கத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு..!
Father Committed Suicide in Pondichery
மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, கூனிச்சம்பட்டு பெரமன்னார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (45). இவரது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார். மகன் மீது அதிக பாசம் இருப்பதால் அவரின் இழப்பை தாங்காமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Father Committed Suicide in Pondichery