நித்தியானந்தாவின் தனி தீவுக்கு போக ஆசைப்படும், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!! - Seithipunal
Seithipunal


பண மோசடி, ஆள்கடத்தல், பாலியல் புகார்கள் என நித்தியானந்தா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் பாய்ந்து இருக்கின்றது. அதே நேரத்தில் குஜராத் மாநிலம் ஹீராபூரில் அமைந்துள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடி இருக்கின்றது. மேலும், ஆசிரமத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

நித்தியானந்தா ஆசிரம நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நித்தியானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், காவல்துறையினருக்கு தண்ணி காட்டி வரும் நித்தியானந்தா யூடியூபில் அவ்வப்போது தலைக்காட்டி பிரசங்கம் செய்து வருகின்றார். 

ஈகுவடார் நாட்டில் தான் தனித்தீவு ஒன்றை வாங்கி இருப்பதாகவும், அதை தனி நாடாக அறிவிக்கக்கோரி தான் ஐநாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த தீவுக்கு கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. அதுமட்டுமின்றி அந்த தீவை நித்தியானந்தா இந்துக்களின் நாடாக உருவாக்கவுள்ளதாகவும். மேலும் அந்த தீவிற்கு செல்வதற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்ற புதிய தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த தீவிற்கு செல்வதற்கு எப்படி விசா வாங்குவது என கேட்டு ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை  கமெண்ட் செய்துவருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous cricket player tweet for nithyananda


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->