ஈரோடு ஸ்ரீபதி அசோசியேட்டர்ஸ் ரெய்டு விவகாரம்.. 2 நாட்களாக தொடர்ச்சி.. கோடிக்கணக்கில் முறைகேடு உறுதி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள தங்கப்பெருமாள் கோவில் வீதியில் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் பேருந்துகள் இயக்கம், கட்டுமான நிறுவனம், மசாலா பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனம் வருமானத்தை குறைத்து காண்பித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த சோதனையில், கணக்கில் வராத ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.16 கோடி அளவிலான வருமான வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த சோதனையில், ஈரோடு மற்றும் கோவை, மதுரை அலுவலகங்களை சார்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை முற்றிலும் நிறைவடைந்த பின்னர் முழுமையான தகவல் வெளியிடப்படும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Sreepathi Associates IT Raid 15 December 2020 Update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->