பெரியாருக்கு ட்விட்டரில் "புகழாரம்" சூட்டிய எடப்பாடி பழனிச்சாமி..!  - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் செப்ட்ம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் அரசு விழாவாகவும், சமூகநீதி நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது. 

இன்று பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், உறுப்பினர்கள், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

பெண்களின் சம உரிமைக்காக போராடிய புரட்சியாளர் பெரியார்: எடப்பாடி பழனிசாமி டுவீட்

இந்நிலையில், எதிர்க்கட்சித்தலைவரான எடப்பாடி பழனிசாமி தன்னுடைய டுவீட்டரில் பெரியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் டுவீட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: "சமூகத்தில் நிலவிய பழமைவாத கருத்துகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவாளர், பல்வேறு சமூகநீதி போராட்டங்களை முன்னெடுத்து வென்ற சமத்துவவாதி, 

பெண்களின் சம உரிமைக்காக போராடிய புரட்சியாளர், தன்னலமற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாளில் அவரின் பெரும்புகழை வணங்கி போற்றுகிறேன்" என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS birthday wishes to periyar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->