இன்ஜினியரை கொள்ளையனாக மாற்றிய ஆன்லைன் சூதாட்டம்.!
Engineer Turned Robber Due to Online Gambling
ஆன்லைன் சூதாட்டத்தில் இன்ஜினியர் பணத்தை இழந்ததால் திருடனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி என்பவர் தனது மகளுடன் சென்னை வந்துள்ளார். பின்பு மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிரி தெரு வழியாக மண்டபம் நோக்கி நடந்து சென்றுள்ளார்.
அப்பொழுது திடீரென இளைஞர் ஒருவர் தமிழ்ச்செல்வி அணிந்திருந்த தாலி செயினை பரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வி, சத்தம் போட்டதையடுத்து அப்பகுதியில் இருந்து திரண்டு வந்த பொதுமக்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்பு அந்த இளைஞரை அசோக் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கே.கே. நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (24) என்பது, சிவில் என்ஜினீயரான இவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது.
மேலும் சரவணன் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் நண்பர்களிடமும் ரூ.5 லட்சம் வரை கடனாக வாங்கியதால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனால் சரவணன் கொள்ளையனாக மாறி நகை பறிப்பில் ஈடுபட திட்டமிட்டு, முதல் முயற்சியாக தமிழ்செல்வியிடம் நகை பறித்தபோது பொதுமக்களிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் சரவணன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Engineer Turned Robber Due to Online Gambling