மின்கம்பத்தில் பழுது பார்த்த எலக்ட்ரீசியன்.! மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் மின்கம்பத்தில் பழுது பார்த்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் நகர் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பாபு (45). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதால் பெற்றோருடன் வசித்து வந்தவர்.

இந்நிலையில் பாபு நேற்று முன்தினம் மாலை, திருவல்லிக்கேணி நடுகுப்பம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் அனுமதியின்றி ஏரி பழுது பார்த்துள்ளார். அப்பொழுது திடீரென பாபு மீது மின்சாரம் பாய்ந்ததால் மின்கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electrician killed electrocuted in Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->