இந்த தொகுதியில் அ.தி.மு.கவின் வெற்றிதான்... - இபிஎஸ் உறுதி.!
Edappadi Palaniswami Thoothukudi campaign
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது, தி.மு.க எம்.பிக்கள் பொதுமக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்கவில்லை. பொதுமக்களுக்கு பிரச்சனை என்றால் அரசு ஓடிவந்து உதவி செய்ய வேண்டும்.
அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் வெள்ளத்தில் பாதிப்படைந்த போது நான் தான் வந்தேன்.
புயல் வெள்ளத்தின் போது தி.மு.க அரசு துரிதமாக செயல்படவில்லை. அ.தி.மு.க குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார்.
பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருப்பது திமுகவா? அதிமுகவா? நாங்கள் நினைத்திருந்தால் பாஜகவுடன் கூட்டணியில் இருந்திருப்போம். ஆனால் எங்களுக்கு தேவையில்லை.
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் அ.தி.மு.கவின் முதல் லட்சியம். ஆட்சி அதிகாரத்திற்காக மட்டுமே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.
வருகின்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க வெற்றி தான். 2026 இல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி மீண்டும் மலரும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami Thoothukudi campaign